Showing posts with label சிற்றின்பம். Show all posts
Showing posts with label சிற்றின்பம். Show all posts

Saturday, January 11, 2014

நாணம்

அவளின் துகில் கூட
எதேச்சையாக எனைத் தொட்டபோதும்
எள் என்பதற்குள் எனை நீங்கியது...

பாவையின் விழியோ
பாவி என் கண் பாவைப் படும் முன்
பட்டென விலகியது...

பேதையின் கருங்குழலோ
பாதையில் நான் நெருங்குவதற்குள்
முறுக்கிக்கொண்டு அவளை முந்தியது...

சட்டென்றுதான் உறைத்தது
ஈதனைத்தும் என் நாணம் எனக்குத்
தோற்றுவித்தக் காட்சிப் பிழை என்று!!