Tuesday, December 15, 2009

தமிழ் மறவன்

நான் ஒரு கோழை
தைரிய தனம் குன்றிய ஏழை
மூவேந்தன் வழி வந்த வாழை
என் கை அறிந்ததில்லை வாளை
இடர் நேரிடும் வேளை
காக்க வல்லனோ ஒருவரேனும்?

பாரி பரம்பரையில் பிறந்திட்டப் பரதாரி நான்
வாரி இறைத்து வாங்கிய பெயரை
கூறிட்டுக் கூவி விற்கும் வியாபாரி காண்

சோழன் வழி வந்திட்டதாய் மார் தட்டி
உண்மை உரைக்க மறுக்கிறேன்
கோழையாய் உழலும் என் நிலை
வெளி க் கொணர வெறுக்கிறேன்

முல்லைக்குத் தேர் கொடுத்தக் குலத்தோன்றலுக்கு இன்று
பிள்ளைக்குப் பிடி சோறு கொடுக்க மனத் தோன்றலில்லை