Tuesday, October 30, 2007

மரம்

கலமேந்தி களங்கள் பார்த்தான்
    புலங்கள் நிறுத்தினான்
உளைவேக அடுப்பனல் வளர்த்தான்
    வளங்கள் பெருக்கினான்
தன்குடைகீழ் குடிகள் காத்தான்
    கொடிகள் தாங்கினான்
கூர்முனைகட்கு மார் காட்டினான் 
    வெட்டுண்ணப் பிறந்தவன் 
மறைவழுவா முறைதவறா நெறிபிறழா
    மறமுடை மரமாமவன். 

மரத்திற்கும் மறவனுக்கும் இடையில் ஒரு சிலேடை.

பயங்கொள்ளி பாரதி

கருத்துகள் ஒன்று
சிந்தனைகள் ஒன்று
கொள்கைகள் ஒன்று
கோபங்கள் ஒன்று
எனக்கும் அவனுக்கும்
ஆனால்...
நான் பயங்கொள்ளி...
அவன் பாரதி!!!

Thursday, October 18, 2007

வந்தான் வருணன்!!

மின்னொளிப் பந்தங்கள் வழிகாட்ட
பேரிடிப் பறைகள் தாளங் கொட்ட
கருமுகிற் தேரிலேறியே
புலன் சேர்ந்து புண்ணியஞ் சேர்க்கத்
தவழ்ந்து வந்தான் !!
நிலன் நோக்கும் ஆவல் தாளாமல்
மேக தாரகைகளை விடுத்து
தான் மட்டும் தாழ்ந்து வந்தான் !!
மண்ணளக்கும் ஆசை மாளாமல்
மணிமணியாய்ச் சிதறி வந்தான் !!

பனித் துளி!!

இரவில் பூத்து..
இலை தாங்கும்..
இம்மியளவுச் சூரியன்..

தெரு விளக்கு!!

கருப்பு வெயில்
கவியும் வேளையில்
மஞ்சள் நிழல் தரும்
மாயக் குடை..