Wednesday, November 26, 2008

வெண்ணிலவு

வான தேவியின் கருநுதலில் 
    எடுப்பாய்
கதிரவன் இட்ட 
    வெண்ணிற பொட்டு

Thursday, May 22, 2008

மதி மயக்கம்

ஈ மொய்க்கும் மலரொப்ப-விண் 
மீன் மொய்க்கும் மகளாய்
மஞ்சள் மதி

மலர் தீண்டும் தென்றலீடாக-என்
மனம் கோதும் விரல்களாய்
வெள்ளொளிக் கிரணங்கள்

பார் தறித்த போர்வைமேல்
பால் தெளிக்கும் போக்காய்
மதிமங்கையின் நடை

மாயவித்தகன் ஆட்டுவிக்கும் பதுமைபோல்-என்
தூயசித்தம் கெட்டுவிட்டு சிதரவைக்கும்
வான்மகளின் நளினங்கள்

குளிர்கூசி சிலிர்க்கும் சிறுவனாய்
நாணங்கூசி நெளிந்து நிற்கிறான்-கடலரசன்
நிலாமகள் நகைக்கண்டு

Thursday, May 15, 2008

கானல் நீர்

எரிக்கும் பாலைமணலில்-வாயு
வார்த்திட்ட வகிட்டுச் சித்திரமாய்
வான்மகள் சேலையில் முகிற்கோலம்

Sunday, February 10, 2008

உழவு

உதிரம் உதிராக் குறையென
வேர்வையூற்றி வேரூன்றச் செய்து
நிலம் பார்த்து நீர்பாய்ச்சி
சேறுபூசி சேர்ந்து வயலாடி
வயல் பார்த்து உரமிட்டு
கண்விழித்துப் பயிர் வளர்த்து
நிலமகளுக்குப் பச்சைத் துகிற் பரிசளித்தான்...