Friday, December 16, 2022

பேரின்பம்

பிஞ்சுப்பொதி - என்
நெஞ்சுமுட்டி கழுத்து கட்டிச் சிரிக்கையில் - அழுத்திய
நெஞ்சுச் சுமைகள்
பஞ்சுப் பொதியெனப் பறந்தன - கொளுத்திய வீண்
வஞ்ச சதிகள் மறந்தன

எஞ்சி நிற்கும் இக்கணம்
எங்ஙனம் என்றரியாது
இங்ஙனம் மட்டும் புரியுது

இது இன்பம்! பேரின்பம்!!

No comments:

Post a Comment