Friday, June 18, 2010

முடிவிலி

இத்தனை நாள் பிழைத்தேனோ
இனியும் இறப்பதற்கு
எத்தனை தான் உழைத்தேனோ
பொற்குடமேதும் நிறைப்பதற்கு

பின்னும் ஏதோ தயக்கம்
இறந்த பின்பும் தானோ மயக்கம்
நின்றிடும் தானே இயக்கம்
அறிந்தும் ஏனோ கலக்கம்

தன்னழிவின் சாத்தியம் சொற்பம்
இறைக்கும் இதுவோ குழப்பம்
இருந்தும் உண்டோ நிறுத்தம்
இருத்தும் விசையின் விருப்பம் ?

2 comments:

  1. சட்டி சுட்டதடா ... கை விட்டதட ...

    புத்தி கேட்டதடா... நெஞ்சைத் தொட்டதடா ...

    ReplyDelete